20 ஆண்டுகள், ரூ.1 கோடி இலக்கு..! மாதம் எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும்..?

30 வயதான நான். மாதம் ரூ.70,000 சம்பளம் வாங்குகிறேன். என் 50-வது  வயதில் ரூ.1  கோடி சேர்க்க விரும்புகிறேன். நான் எந்தெந்த ஃபண்டுகளில், மாதம் எவ்வளவு முதலீடு செய்யலாம்?

- நிவேதா குமார், சென்னை-600 017



சி.பாரதிதாசன், நிதி ஆலோசகர், சென்னை /புதுச்சேரி


சி.பாரதிதாசன்


உங்கள் இலக்குக்கு இன்னும் 20 ஆண்டுகள் இருப்பதால், நீங்கள் உங்கள் முதலீட்டை பங்குச் சந்தை சார்ந்ட்த  ஈக்விட்டி ஃபண்டில் மேற்கொள்ளலாம். உங்கள் முதலீட்டை 20 வருடங்களுக்குக் கீழ்க்கண்ட மியூச்சுவல் ஃபண்டுகளில் மாதந்தோறும் மொத்தம் ரூ.13,000 மேற்கொள்ள வேண்டும்.

ஆக்ஸிஸ் புளூசிப் ஃபண்ட் (ரூ.5,000 லார்ஜ்கேப் ஃபண்ட்) ஆதித்ய பிர்லா சன் லைஃப் ஈக்விட்டி ஃபண்ட் (ரூ.5.000  மல்டிகேப் ஃபண்ட்) எஸ்.பி. ஸ்மால்கேப் ஃபண்ட் (ஸ்மால்கேப் ஃபண்ட் ரூ.3,000) ஆகிய  மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்ய வேண்டும். 20 ஆண்டுகளில் 10% வருமானம் கிடைத்தால், உங்கள் இலக்கான ரூ.1 கோடியை அடையலாம். இதுவே 12% வருமானம் கிடைத்தால், கூடுதலாக ரூ. 26 லட்சம் கிடைக்கும்.

மேலும், உங்கள் முதலீட்டிலிருந்து இரண்டு வருடங்களுக்கு முன்னதாகவே மொத்த பணத்தையும் எடுத்து, .சி..சி. பேலன்ஸ்டு அட்வான்டேஜ் ஃபண்டில் மாற்றிவிடவும். அப்போதுதான் பங்குச் சந்தையின் திடீர் இறக்கத்திலிருந்து முதலீட்டைப் பாதுகாக்க முடியும்.”


S.Bharathidasan DECE, BA, FChFP.

Chartered Financial Practitioner

Chennai & Pondi 

MOB; 94441 94869, 

99528 74869

s_bharathidasan@yahoo.com

mailsbdpdy@gmail.com

Share:

Search This Blog

Blog Archive

Powered by Blogger.

Recent Posts